காஞ்சிபுரம்: பஞ்சுப்பேட்டையில் உள்ள, திரவுபதி அம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் நேற்று, பால்குடம் எடுத்தனர். காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று காலை, கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, மேள வாத்தியங்களுடன் பக்தர்கள் பால் குடம் எடுத்து, ஊர்வலமாக வந்தனர். காலை, 11:30 மணிக்கு, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின், ஊஞ்சல் சேவை நடைபெற்றது.