பதிவு செய்த நாள்
13
நவ
2018
03:11
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கொடியேற்றம் தொடங்குவதை முன்னிட்டு கோவில் காவல் தெய்வமான பிடாரியம்மன் உற்சவம் நடந்தது. இதில் நேற்று இரவு பிடாரியம்மன் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா, நாளை காலை, 5:00 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சுவாமி தங்க கொடி மரம் முன் எழுந்தருள, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 23ல், காலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரே பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.