சிவனின் மறுவடிவே முருகன். பாம்பன் சுவாமிகள் அறுமுகச் சிவனார் என்றே முருகனை சிவனாகவே தன் பாடல்களில் குறிப்பிடுகிறார். தாயான பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை. சூரபத்மனை வெல்ல போருக்கு புறப்பட்ட போது முருகன், தாயிடம் ஆசி பெற்றார். அப்போது பார்வதி தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி வேலாகத் தந்தாள். சக்திவேல் இன்றி முருகன் தனித்து காட்சி தருவதில்லை. சக்திவேல் தாங்கிய முருகனே சூரசம்ஹாரத்தை வெற்றியுடன் முடித்தார். அவரைச் சரணடைந்தால் என்றென்றும் வெற்றியே சேரும்.