திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2018 10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை இசைக்க, மேளதாளம் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷமிட தங்க கொடிமரத்தில் அதிகாலை 5.31 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அண்ணாமலையாருக்கு மாலை அணிவித்து கொண்டு விரதத்தை பக்தர்கள் தொடங்கினர். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் வரும் 23ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. கொடி ஏற்றும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.