அலங்காநல்லுார்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயிலில் கந்தசஷ்டி விழா நவ., 8 பக்தர் களுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அன்னம், காமதேனு, யானை, ஆட்டு கிடாய், சப்பரம் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வாக சூரம்ஹார விழா நடந்தது. மாலை 4:35 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி புறப்பாடாகி வேல் வாங்குதல் நடந்தது. பின் அதே வாகனத்தில் மாலை 5:40 மணிக்கு சுவாமி கஜமுகாசூரனையும், சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மேலுார்: இங்குள்ள சிவன் கோயிலில் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி பாலசரவணன் செய்திருந்தார்.