மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கந்தசஷ்டி நிறைவு விழாவில் கூடல்குமாரருக்கு பாவாடை நைவேத்தியம் படைக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கந்த சஷ்டி நிறைவு விழாவில் கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம்(பாவாடை) சாத்துப்படியும், விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெற்றது. சஷ்டி விரதத்தை முடித்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.