பதிவு செய்த நாள்
15
நவ
2018
12:11
பழநி: கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பழநி முருகன் மலைக்கோயிலில் கந்தசஷ்டிவிழா நவ., 8ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. கோயில் யானை கஸ்தூரி மலைக்கோயிலில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியது. நேற்றுமுன்தினம் (நவம்., 13ல்) சூரசம்ஹாரம் நடந்தது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நேற்று (நவம்., 14ல்) மலைக்கோயிலில் விநாயகர் பூஜையுடன், கும்பகலசங்கள் வைத்து யாகபூஜையும், சண்முகர், வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சண்முகர், வள்ளி,தெய்வானை அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியநாயகியம்மன்கோயிலிலும் நேற்று 14ல் இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
* சின்னாளபட்டி:சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில் சஷ்டி விழாவில், திருக்கல்யாணம் நடந்தது. சின்னாளபட்டியில், நான்கு முகங்களைக்கொண்ட சதுர்முக முருகன் கோயில் உள்ளது. இங்கு, இந்தாண்டிற்கான சஷ்டி திருவிழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், வேதிகார்ச்சனை உள்பட சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் (நவம்.,13ல்) நடந்தது.
கலசாபிஷேகம், அன்னை காமாட்சியிடம் வேல் வாங்குதலைத்தொடர்ந்து, சூரசம்ஹாரம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று (நவம்., 14ல்) நடந்தது. யாகசாலை பூஜையுடன் துவங்கி, சிவசுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம் நடந்தது.கும்பாபிஷேகம்ம் பாடியூர் கிராமம் பி.கொசவபட்டியில் நூறாண்டு பழமை வாய்ந்த சிவசக்தி விநாயகர், பகவதியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக நவ.12 மாலை துவங்கி நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று (நவம்., 14ல்) காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ரெங்கநாத புரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் அர்ச்சகர் ஹரி, திண்டுக்கல் காளியம்மன் கும்பாபிஷேக குழுத்தலைவர் பிரசன்ன வெங்கடேச அய்யர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். வேடசந்தூர் பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, ஒன்றிய கமிஷனர் குருவானந்தம் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.