பதிவு செய்த நாள்
15
நவ
2018
05:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவில், காலை, 10:00 மணிக்கு, மூஷிக வாகனத்தில் விநாயகர், தங்க சூரிய பிரபை வாகனத்தில், சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. வரும், 20ல், மகா ரத தேரோட்டமும், 23ல், காலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரே பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.