பதிவு செய்த நாள்
16
நவ
2018
11:11
காஞ்சிபுரம்: ஐப்பசி திருவோணம் நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம், துாப்புல் வேதாந்த தேசிகன் புறப்பாடு நடந்தது.வைணவ சமய பெரியவர்களுள் ஒருவரான வேதாந்த தேசிகன், 1268ல், புரட்டாசி திருவோணத்தில், காஞ்சியில் அவதரித்தார். இவருக்கு விளக்கொளி பெருமாள் கோவில் அருகில் தனி சன்னிதி உள்ளது. வேதாந்த தேசிகனின், 750வது வார்ஷீக மஹோத்ஸவம், செப்டம்பரில் நடைபெற்றது. ஐப்பசி திருவோணத்தையொட்டி, நேற்று காலை மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார், வேதாந்த தேசிகன்.துாப்புல் கோவிலில் இருந்து புறப்பாடாகி, முக்கிய வீதிகள் வழியாக, வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளில் உலா வந்தார். அங்கு, நாலாயிர திவ்ய பிரபந்தம் நடந்தது. பின், துாப்புல் கோவில் வந்தடைந்தார்.