பதிவு செய்த நாள்
16
நவ
2018
12:11
விழுப்புரம்:விழுப்புரம் சிஸ் நகர் செல்வ விநாயகர் கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் (நவம்., 14ல்) காலை 7:00 மணிக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவ வரிசை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, இரவு 6:30 மணிக்கு திருக்கல்யாண வைப யாகம், இரவு 9:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, விழுப்புரம் நடராஜர் தெரு, அங்காளபரமேஸ்வரி பெரியாண்டவர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமிக்கு திருக்கல்யாணம்
நடந்தது.