பதிவு செய்த நாள்
16
நவ
2018
02:11
சபரிமலை : சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எரிமேலியில் மறு வேடமிட்டு பேட்டை துள்ளல் நடந்தது.
சபரிமலை நடை இன்று திறக்கப்படவுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் எரிமேலியில் மறு வேடமிட்டு பேட்டை துள்ளல் நடத்தினர். சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு, மதியம் நிலகல்லில் அனைத்து வாகனங்ளும் நிறுத்தப்பட்டனர். பக்தர்கள் அரசு பஸ்களில் அனுப்பப்பட்டனர். பத்திரிகையாளர்கள் வாகனங்களையும் போலீசார் தடுத்து நிலகல்லில் நிறுத்தினர்.
பதட்டம்: நவ.,17 ல் சபரிமலை செல்ல உள்ளதாக அறிவித்திருந்த திருப்தி தேசாயும் இன்று கொச்சி வந்துள்ளதால் கேரளாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கேரள அரசின் முடிவை எதிர்த்தும் தற்போது பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. திருப்தி தேசாய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சி விமான நிலையம் முன் அதிகாலை முதலே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளதால் சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.