மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2018 11:11
மயிலாடுதுறை: சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாபவிமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம் மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில் தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்மதீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப் பாயாக என்று அசரீரி கூறிய து. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிர்ம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்து மயில் உரு நீங்கி, தேவியாக சுய உருப்பெற்றார். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரி மாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும்.
நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு பாவங்களை போக்கி அருள்பாலிக்க வேண்டும் என்றார் என்பது ஐதீகம்.
இதனை நினைவுக் கூறும் வகையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நகிழ்ச்சி நடைபெறும். அதேபோல் இவ்வாண்டு கடந்த அக்டோபர் 18 ம் தேதி துலா உற்சவ தொடக்க தீர்த்தவாரியும். 19ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் கடைசி பத்து நாள் உற் சவம்தொடங்கி 13ம் தேதி திருக்கல்யாணமும், 15ம் தேதி திருத்தேரோட்டம் நடை பெற்றது.
தொடர்ந்து நேற்று (நவம்., 16ல்) கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனைமுன்னிட்டு திரு வாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி. அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பி கை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர். தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டாரசந்நிதி முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்தர் சுவா மிகள் முன்னிலையிலும் காவிரி துலாக் கட்டத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மதியம் சுவாமி தீர்த்தம் கொடுக்க பல ஆயிரக்கணக்கான பக்தர் கள் புனித நீராடினர். இதில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாதச் சிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
17.எம்.ஒய்.எல்.06,07,08...மயிலாடுதுறையில் நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.