பதிவு செய்த நாள்
18
நவ
2018
12:11
காஞ்சிபுரம்: பாலாற்றில், மணல் லிங்கம் அமைத்து நடத்திய வழிபாட்டில், எராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.காஞ்சிபுரம், பாலாற்றில் ஐப்பசி கடைசியில், முடவன் முழுக்கு என்ற நிகழ்ச்சி, திருஞானசம்பந்தர் இறைப்பணி மன்றம் சார்பில், ஆண்டு தோறும் நடைபெறுகிறது.நேற்று, இந்த நிகழ்ச்சியில், நெல்லையப்பர், காந்திமதி வளைகாப்பு உற்சவ திருக்கோலம் அமைத்து வழிபாடு நடந்தது. அப்பகுதி மக்கள், ஆற்றில் குளித்து, மணல் லிங்கம் அமைத்து பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அந்த காலத்தில், முடவன் ஒருவன், ஐப்பசி மாதத்தில், காவிரி ஆற்றில் குளித்து இறைவனை நினைத்து வழிபட்டதால், அவன் முடம் நீங்கி இறைவன் அருள்பெற்றதாக ஐதீகம்.இந்த வழிபாட்டின் காரணமாக, இதற்கு முடவன் முழுக்கு என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செவிலிமேடு, பாலாற்றில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.