பதிவு செய்த நாள்
19
நவ
2018
11:11
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு, உள்ளூர் பக்தர் ஒருவர், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கவசங்களை நன்கொடையாக வழங்கினார். ஆந்திர மாநிலம், திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில் வளாகத்தில், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இதில், சீனிவாச பெருமாளுக்கு, உள்ளூர் பக்தரான லட்சுமி நரசிம்மாச்சாரி, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வெள்ளியில் ஆன கவசங்களை நன்கொடையாக வழங்கினார். இதை அவர், நேற்று (நவம்., 18ல்) காலை திருச்சானூர் கோயில் அதிகாரிகளிடம் அளித்தார்.