பதிவு செய்த நாள்
19
நவ
2018
11:11
காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோவிலில், கடை ஞாயிறு விழா, நேற்று துவங்கியது. காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை தீர்ப்பதற்காக, கோவிலில் நேர்த்தி கடன் செலுத்துவர். மண் சட்டியில் தேங்காய், பழம் வைத்து, மாவிளக்கு ஏற்றி, சுவாமியை வழிபடுவது வழக்கம். இதை கடை ஞாயிறு விழா என்பர். இந்த விழா, நேற்று துவங்கியது. அடுத்து வரும் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளிலும், பக்தர்கள் வழிபாடு நடைபெறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏராளமான பக்தர்கள் நேற்று பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.