மழை இல்லை எனில் சதுரகிரியில் அனுமதி : வனத்துறை அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2018 12:11
வத்திராயிருப்பு: புயல் மற்றும் கனமழை இல்லாவிட்டால் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள், என, வனத்துறை தெரிவித்துள்ளது.
பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். நவ.22 அன்று நடக்கும் பவுர்ணமியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, நாளை (நவ.20) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.தற்போது ஏற்பட்டுள்ள புயல் அறிகுறியால் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த சந்தேகம் பக்தர்களிடம் எழுந்து வருகிறது. வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, தற்போது மழைமட்டுமின்றி, புயல் அறிகுறி ஏற்படுவதால், நவ.20 அன்று மழை இல்லாவிட்டால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், என்றனர்.