கன்னிவாடி: கன்னிவாடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோமலிங்கபுரம் உள்ளது. இப்பகுதியில் உள்ள மலைக்குன்றின் மெய்கண்ட சித்தர் குகை அருகே சோமலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவாரத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக, சங்காபிஷேகம் நடைபெறும். அதன்படி நேற்று, இக்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக, ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்க சுவாமிக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், சங்காபிஷேக பூஜை துவங்கியது. மெய்கண்ட சித்தர் குகையில் 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வேதி தீர்த்தம் நிரப்பி விசஷே பூஜைகள் நடந்தது. பின்னர், சோமலிங்கசுவாமி, நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.