சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சோமவாரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கோவிலை வலம் வந்தனர். பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.இதேப் போன்று, சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலிலும் சோமவாரத்தையொட்டி மகா மண்டபத்தில் சிறப்பு ேஹாமம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சங்காபிஷேகம் நடந்தது.கடலுார் கடலுார், புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரருக்கு நேற்று சிறப்பு ேஹாமம், பூஜை நடந்தது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடந்தது.