பதிவு செய்த நாள்
21
நவ
2018
10:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கூடுதலாக, 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், கோபுர நுழைவு வாயில், சன்னதி நுழைவு வாயில், வடக்கு மற்றும் தெற்கு ஒத்தவாடை தெருக்கள், மேற்கு கோபுரத்தெரு, ராஜகோபுரம் முன் உள்ள பகுதிகள் உட்பட, 103 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தீப திருவிழா நாளையொட்டி, கூடுதலாக கோவில் வளாகத்தில், 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவிலில் இதுவரை, 127 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டை போல, இந்தாண்டும், சுவாமி வீதியுலா வரும் மாடவீதிகளில், தற்காலிகமாக, 11 இடங்களில், 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருக்கல்யாண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள, 14 கண்காணிப்பு கேமராக்களும், 360 டிகிரி சுழல் கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.