பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2018 11:11
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. முன்னதாக காலை 7:00 மணி முதல் சிறப்பு ேஹாமங்கள் நடத்தப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளுக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு தீபாராதனைக்குப் பின், கைசிக ஏகாதசி விழாவையொட்டி புராணக்கதை வாசிக்கப்பட்டது.