பதிவு செய்த நாள்
21
நவ
2018
12:11
திருவண்ணாமலை :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில், நேற்று (நவம்., 20ல்) பஞ்ச மூர்த்திகள் மஹா தேரோட்டம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், நேற்று (நவம்., 19ல்) ஏழாம் நாள் விழாவில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகிய, உற்சவ மூர்த்திகள் தனித்தனி தேரில் வீதி உலா வந்தனர்.காலை, 6:45 மணிக்கு, விநாயகர் தேர். தொடர்ந்து, வள்ளி,தெய்வானை யுடன் சுப்ரமணியர் தேர், மாட வீதி வலம் வந்து, நிலையை அடைந்தது.
தொடர்ந்து, 100 டன் எடையுள்ள, 118 அடி உயரமுள்ள மஹாரத தேரோட்டம், மதியம், 2:30 மணிக்கு நடந்தது. இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார்.
இதை, மூன்று டன் இரும்பு சங்கிலியாலான வடம் பிடித்து, மாட வீதியில் இழுத்து சென்ற பக்தர்கள், அண்ணாமலையாருக்கு, அரோகரா என, கோஷம் எழுப்பியவாறு சென்றனர். மஹாரதம் நிலைக்கு வந்தவுடன், பெண்கள் மட்டும், வடம் பிடித்து இழுத்த பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் இரவு வரை நடந்தது.