பதிவு செய்த நாள்
21
நவ
2018
12:11
மானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கார்த்திகைக்காக கலைநயமிக்கரெடிமேட் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
வரும் நவ.23ந் தேதி திருக்கார்த்திகை திருநாள் அன்று வீடுகள் தோறும் விளக்குகள்ஏற்றி வழிபடுவர்.பலரது வீடுகளில் மண்ணால் ஆன விளக்குகளில் எண்ணெய்ஊற்றி திரி வைத்து விளக்குகளை ஏற்றி வைப்பர்.
இன்றைய நாகரீக காலத்தில் அதற்கும் ரெடிமேடாக மெழுகு விளக்குகள் போட்டிக்கு வந்துள்ளன. மெழுகால் தயாரிக்கப்படும் கார்த்திகை விளக்குகள் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கலைநயத்தோடு மிகவும் அழகாகவும், தரமாகவும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மெழுகால் ஆன ஐயப்ப சன்னிதானம், கற்பக விருட்ஷம், அன்ன தீபம், மயில் தீபம், பூர்ண கும்ப தீபம், 3 முக விநாயகர் தீபம், லட்சுமிபாதம், சங்குமுக விநாயகர் தீபம், அண்ணாமலை யார் தீபம், லட்சுமி தீபம், குபேர தீபம்,அகல்விளக்குகள் என பல்வேறு வடிவங்களில் ரெடிமேட் விளக்குகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த விளக்குகள் ரூ.15லிருந்து ரூ400 வரைக்கும் டிசைன்களுக்கேற்ப விற்பனைசெய்து வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபட்டு ள்ள சிவக்குமார் கூறுகையில், நாங்கள் வருடந்தோறும் மெழுகுவர்த்திகள் தயாரிக்கும் பணியிலும் இதனை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கும் பயிற்சியிலும் ஈடுபட்டு
வருகிறோம்.திருக்கார்த்திகைக்காக வருடந்தோறும் புதுப்புது டிசைன்களைஉருவாக்கி வருகிறோம் என்றார்.