பதிவு செய்த நாள்
21
நவ
2018
01:11
திருப்பூர்:திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு செல்வோர், குரூப் டிக்கெட் பெற, போக்குவரத்து கழகம் அழைப்பு விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக கோவை
கோட்டம் சார்பில், கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள், நாளை (21ம் தேதி) நாளை மறுதினம் (22ம் தேதி) இரு நாட்கள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் குரூப் டிக்கெட் புக்கிங் செய்ய, கோவை உதவி மேலாளர் இயக்கம் 9442501928,
ஈரோடு உதவி மேலாளர் இயக்கம் 9442501924, துணை மேலாளர் (வணிகம்) திருப்பூர், 9442110877 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவிப்பு
பலகை, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ளது.