பதிவு செய்த நாள்
21
நவ
2018
01:11
அரூர் : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அரூரில், பல்வேறு வடிவங்களில் அகல்விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.வரும் 23ல், கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, தர்மபுரி மாவட்டம், அரூர் கடைவீதியில் அகல்விளக்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், தயாரிக்கப் பட்ட மண் விளக்கு, அச்சு விளக்கு, பீங்கான் விளக்கு, பஞ்சமுக விளக்கு என பல்வேறு வடிவங் களில் அகல்விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அளவைப் பொருத்து, ஒரு அகல்விளக்கு, 1.50 ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.