பதிவு செய்த நாள்
21
நவ
2018
01:11
காட்பாடி : தீபத்திருவிழாவிற்கு, பக்தர்கள் செல்ல, 12 ஆயிரம் டாக்சி, டெம்போ டிராவலர்ஸ் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பரணி தீபம் வரும், 23ல் காலை, 4:00 மணிக்கும், மகா தீபம் இரவு, 6:00 மணிக்கும்
நடக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் அங்கு செல்வர். தமிழகம் முழுவதும் இருந்து, திருவண்ணாமலைக்கு செல்ல டாக்சி, டெம்போ டிராவலர்ஸ் வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழக வாடகை வாகன உரிமையாளர்கள் சங்க செயலாளர் பசுபதி பாண்டியன் கூறியதாவது: இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழாவில்
பங்கேற்க, திருவண்ணாமலைக்கு பக்தர்கள் செல்வதற்காக, தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் டாக்சி கார், டெம்போ டிராவலர்ஸ், மினி பஸ்களை வரும், 22 முதல், 24 வரை பக்தர்கள்
புக்கிங் செய்துள்ளனர். நிறைய வாகனங்கள் சபரிமலைக்கு சென்றுள்ளன. தற்போது, வாகனங்கள் இல்லாததால் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.