காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தின விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2018 02:11
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினம் நேற்று (நவம்., 20ல்) கொண்டாடப்பட்டது. காலை 11:00 மணிக்கு 1008 பால் குட ஊர்வலம் முத்தாலம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டது.
தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு அன்னதானமும், மாலை 4:30 மணிக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அம்பாள் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராமசாமி தலைமையில் செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர் மற்றும் கணக்கர் அழகு பாண்டி செய்திருந்தனர்.