சத்யசாயி பிறந்த நாள் விழா 2,500 பக்தருக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2018 12:11
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி சார்பில், சத்ய சாயிபாபா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.ஸ்ரீசத்ய சாயி பாபாவின், 93 வது பிறந்த நாள் விழா, 130க்கும் அதிகமான நாடுகளில் நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்ட சத்ய சாயி சேவா சமிதிகள் சார்பில், பி.என்., ரோடு சாயிபாபா கோவிலில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.அதிகாலை, 5:30 மணி முதல், 7:30 மணி வரை, பஜனை, ஓங்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், ேஹாம பூஜைகள் நடந்தன. காலை, 11:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., குணசேகரன், அன்னதானத்தை துவக்கி வைத்தார். மொத்தம், 2,500க்கும் அதிகமான பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி தலைவர் சாய் சிவசுப்ரமணியம் தலைமையில் செய்தனர்.