மேட்டுப்பாளையம் சாய்பாபா கோவிலில் பிறந்த நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2018 12:11
மேட்டுப்பாளையம்: சத்ய சாய்பாபா, 93வது பிறந்த நாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அன்னபூரணி பேட்டை மற்றும் கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள சாய்பாபா கோவிலில் பிறந்த நாள் விழா நடந்தது. சத்ய சாய் சேவா சமிதிகள் சார்பில், இவ்விழா, 19ல் துவங்கியது. நேற்று காலை, ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனம், புஷ்பாஞ்சலியை தொடர்ந்து, கொடியேற்றப்பட்டது. அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு வஸ்திரம் வழங்கப்பட்டது. காரமடை வித்யா விகாஸ் பள்ளியில் பஜனை, சத்ய நாராயண பூஜை, ஊஞ்சல் சேவை நடந்தது. சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு ேஹாமியோபதி மருத்துவ முகாமும் நடந்தது. டாக்டர்கள் தினேஷ்பாபு, ஜெயகோபிநாத், சமிதி கன்வீனர் குருகிருஷ்ணன், கோபால், வாசுதேவன், மனோஜ்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில், அன்னதானம் வழங்கப்பட்டது. நாகேஷ்ராவ் நன்றி கூறினார்.