திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா: டிசம்பர் 18ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2018 03:12
திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகள் குறித்து அறிவி்க்கப்பட்டு உள்ளது. இந்த டிசம்பர் 18ம் தேதி இரவு வைகுண் ட ஏகாதசியாகும். அன்று காலை 5:30 மணிக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த அனுமதி 19ம் தேதி இரவு வரை நீடிக்கப்படும். கடந்த வருடம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஏகாதசியன்று வைகுண்டவாசல் வழியாக சென்றனர். இந்த வருடம் இன்னும் கூடுதலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.