பதிவு செய்த நாள்
04
டிச
2018
04:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 23ல், 2,668 அடி உயர மலை உச்சியில், ஐந்தடி உயர கொப்பரையில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. நேற்று வரை, 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த நிலையில், மஹா தீபம் விழா நிறைவடைந்தது. இந்நிலையில், மஹா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை, மலை உச்சியிலிருந்து கீழே இறக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம் வரும், 23ல், ஆருத்ரா தரிசனவிழாவில், சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.