கற்பூரம் போல், சந்தன மரம் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தியாகம் செய்வதால், சந்தன மரத்துக்கு ‘தியாக விருட்சம்’ என்று பெயர். தினமும் வீட்டில் சிறிதளவேனும் சந்தனம் அரைத்து அருகில் உள்ள கோயிலுக்கு அளித்து வந்தால் மனம் பரிசுத்தமாகும். இதனால் ஞாபக சக்தி பெருகும். இல்லறம் மற்றும் பக்தி விருத்தியாகும். சந்தனம், மலர்கள், பச்சரிசி மாக்கோலம் போன்றவை பரவெளியை சுத்தி கரிப்பவை. சிறு வயது முதலே இவ்வுத்தமச் சந்தனச் ஸேவைத் திருப்பணியில் பிள்ளைகளைப் பழக்கி வருதல் வேண்டும். சந்தனம் அரைக்கும் போது இட, வலமாக ஆறு முறை சந்தனத்தை அரைத்தல் வேண்டும். ‘அத்ரி, ப்ருகு, குத்ஸ, வஸிஷ்ட, கவுதம, காஸ்யப, ஆங்கீரஸ ரிஷய ’ என்று கூறியோ அல்லது தமிழில் ‘ஏழு முனிகள் திருவுடிகள் போற்றி! போற்றி!’ என்றோ சொல்லியோ சந்தனம் அரைக்க வேண்டும்.