ஒவ்வொரு ஆண்டும் சூரியன் ஐப்பசி மாதம் துலா ராசியில் பிரவேசிக்கும் சமயம் தலைக் காவிரியில் தீர்த்தோத்ஸவம் நடைபெறுகிறது. அப்போது பண்டிதர்கள் குறித்து தரும். ‘காவிரி சங்க ராந்தி’ எனப்படும் முகூர்த்த நேரத்தில் பிரம்ம குண்டகை என்ற இடத்தில் காவிரி அன்னை பால் பொங்குவது போல் பொங்கி கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பரவசப்படுத்துவாள். இந்த அதிசயம் இன்று வரை தவறாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.