சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் நாவலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள தாழம்பூரில் திரிசக்தி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கருவறையில் லட்சுமி, மூகாம்பிகை, ஞானாம்பிகை மூவரும் அருள்கின்றனர். நவராத்திரி உற்சவம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தல அம்மன்களை வழிபட விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை.