நெய்வேலிக்கு அருகே வில்லுடையான்பட்டி எனும் ஊரில், கையில் வில்லேந்தியபடி விரிசடையுடன் வேடனாகத் திருக்காட்சியளிக்கிறார் முருகப்பெருமான். வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அருளும் முருகனின் இந்தத் திருக்கோலம், ‘சிவசுப்ரமணியர்’ என்ற திருப்பெயரில் போற்றப்படுகிறது!