செங்கோட்டையிலிருந்து கேரளா செல்லும் வழியில் உள்ள ‘புளியரை ’ என்ற திருத்தலத்தில் சதாசிவ மூர்த்தி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் இறைவனுக்கு எதிரே நந்திக்கு நடுவில் குருபகவான் தனிச்சன்னிதியில் தென்முகக் கடவுளாக அமர்ந்து காட்சி தருகிறார். சிவனுக்கு நேரில் குரு வீற்றிருப்பதால் சிவபெருமானின் ஆற்றல் முழுவதும் குருவுக்கு கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 படிக்கட்டுகள் உள்ளன. அவரவர் தங்கள் நட்சத்திற்குரிய படிக்கட்டுகளுக்குப் பூஜை செய்வது வழக்கம். இங்கு அருள் புரியும் யோக குருவை வழிபட குருவின் திருவருளும், வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.