ஸ்ரீரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக் குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் மற்றும் காவிரிப் படித்துறையிலிருந்து புனித தீர்த்தத்தை யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்கிறார்கள். மற்ற மாதங்களில் ஸ்ரீரங்கத்தின் வடக்கே உள்ள கொள்ளிடத்திலிருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்கிறார்கள்.