காஞ்சிபுரம் - திருத்தணி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோவிந்த வாடி - அகரம் கைலாசநாதர் கோயிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியையும், கைலாசநாதர் திருமேனியையும் முன்னும், பின்னுமாக ஒரே விமானத்துடன் அமைத்துள்ளார்கள். தட்சிணாமூர்த்தியின் சிரசில் பிறைச்சந்திரன் உள்ளது. மேலும் நெற்றிக்கண்ணுடன் காட்சி தருகிறார். இது ஓர் அரிய தரிசனம் என்று போற்றுவர் திருநாகேஸ்வரத்தில் அம்மன் சன்னிதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியின் பின்கரங்களில் திரிசூலமும், ருத்ராட்சமும் காணப்படுகின்றன. இதுவும் ஓர் அற்புத தரிசனமே!