பாரதத்திலுள்ள புண்ணிய நதிகளில் முதலிடத்தைப் பெறுகிறது. கங்கை, கங்கை நதியை தெய்வமாகப் போற்றுவது சமய மரபு. காசி - ராமேஸ்வரம் யாத்திரைகளில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. கங்கை, கங்கை நதியில் நீராடுவது எல்லாராலும் இயலாது. எனவே, கங்காதேவியே தீபாவளி நாளில் அனைத்து நீர்நிலைகளிலும் எழுந்தருள்வதாக ‘துலாக் காவேரி மகாத்மியம்’ கூறுகிறது. மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் கங்காதேவிக்கு தனிச்சன்னிதி உள்ளது. தீபாவளித் திருநாளில் கங்காதேவி, மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கும் வைபவம் நடைபெறும். அப்பொழுது பக்தர்கள் நீராடுவது வழக்கம் இது ஆண்டுதோறும் நடைபெறும். இது கங்கைக்கு தீபாவளிக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் காவேரி நதியை தட்சிணகங்கை என்று போற்றுகிறார்கள். தீபாவளியன்று காவேரியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன்களைப் பெறலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. மேலும் ஐப்பசி துலா ஸ்நானப் பலன்களும் கிட்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.