தஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் நரிமணம் என்னும் ஊர் உள்ளது இது. ‘ஹரிமணம்’ என்பதன் திரிபு என்பர். இந்த ஊரில் வீற்றிருக்கும் பிள்ளையார் தினமும் பக்தர்கள் கையால் குட்டுப்படுகிறார். இங்கு வந்து பிள்ளையாரை வணங்கும் பக்தர்கள் அவர் தலையில் குட்டி விட்டே சாமி தரிசனம் செய்வார்கள். அப்படி வணங்கினால்தான் வேண்டிக் கொண்ட காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.