பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
திருப்பூர்: ஐந்து கிராம மக்கள் வழிபட்டு வரும், ஆண்டிபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் பூச்சாட்டு, பொங்கல் விழா, 14 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.
திருப்பூர், ஆண்டிபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பெரியாண்டிபாளையம், சின்னாண்டி பாளையம், சின்னிய கவுண்டம்புதூர், குள்ளேகவுண்டம்புதூர் மற்றும் குளத்துப்புதூர் ஆகிய ஐந்து கிராம மக்கள் இணைந்து, விழா நடத்துகின்றனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு, கிராம சாந்தி, பொரி மாற்றுதல், அம்மை அழைப்பு, கம்பம் நடுதல், படைக்கலம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. விநாயகர் பொங்கல் நிகழ்ச்சியை தொடர்ந்து, நேற்று முன்தினம் (டிசம்., 4ல்), ஐந்து ஊர்களில் இருந்தும் மாவிளக்கு எடுத்துவந்து, பெண்கள் வழிபட்டனர்.
நேற்று (டிசம்., 5ல்) காலை முதல், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு, பெண்கள் வழிபட்டனர். மாலை, சின்னாண்டிபாளையத்தில் இருந்து, பக்தர்கள் அலகு குத்தி, மேள, தாளத்துடன் தேர் இழுத்து வந்தனர். தொடர்ந்து, கம்பம் எடுத்து, கங்கையில் விடும் நிகழ்ச்சி நடந்தது.