பதிவு செய்த நாள்
07
டிச
2018
11:12
நாமக்கல்: கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை சார்த்தப்பட்டது. 10:00 மணிக்கு சிறப்பு அபி ஷேகம், வெற்றிலை, துளசி மாலை அணிவித்து, சொர்ணாபிஷேகம், மதியம், 1:30 மணிக்கு முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். குமாரபாளையம், அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், கோட்டைமேடு சிவபெருமான், சவுண்டம்மன் கோவில்கள், ராஜா வீதி காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், ராசிபுரம், திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டை, ப.வேலூர், பள்ளிபாளையம் உள்பட மாவட்டத்தில், பெரும்பாலான கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.