பதிவு செய்த நாள்
07
டிச
2018
11:12
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த மாதம், 20ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கம்பம் நடுதல், கிராமசாந்தி, கொடியேற்றம், மகமேர், மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல் மற்றும் சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. கரகாட்டம், குதிரை ஆட்டம், தாரை தப்பட்டை முழங்க, தேர் இழுத்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை ஒட்டி, ஏராளமான பக்தர்கள், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் கலை நிகழ்ச்சி, கம்பம் விடுதல் நிகழ்வு நடந்தது. மஞ்சள் நீராட்டுடன், விழா இன்று நிறைவடைகிறது.