மகிழ்ச்சி! திருப்புல்லாணியில் மக்கள். சக்கர தீர்த்தம் நிரம்பியதால்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2018 12:12
திருப்புல்லாணி:ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயில் சக்கர தீர்த்த குளம் நிரம்பி வழிவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனால் ஓராண்டிற்கு நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
திருப்புல்லாணி பகுதியில் நிலத்தடி நீர் மேம்பாட்டுக்காக கிராமத்தை சுற்றிலும் ஊரணிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரணிகள் அனைத்தும் மழை பெய்தும், நீர் வரத்துக்கால்வாய்கள் இல்லாததாலும், தூர்ந்து போனதாலும், ஊரணிக்கு நீர் வரத்து இல்லாத நிலை இருந்தது.
முயற்சி: அப்பகுதியை சேர்ந்தவர்கள் மக்களிடம் நிதி திரட்டி ஊரணிகளை தூர்வாரினர். பல இடங்களில் சீமைக்கருவேல முட்புதர்கள் அகற்றம் செய்யப்பட்டன. மழை நேரத்தில் ஊரணிக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஊராட்சி நிர்வாகம் சார்பில் வரத்துக்கால்வாய் அமைக்கப்பட்டது.
மோட்டார் பம்பிங்: ஊரின் எல்லைப்பகுதியில் உள்ள கிணற்றுக்குள் மழை நீர் சேகரிக்கப் பட்டது. இந்த கிணற்றில் இருந்து ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டு, இரவு, பகலாக தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டது. இதன் மூலம் சக்கர தீர்த்த குளத்தில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பி வழிகிறது.
மக்கள் மகிழ்ச்சி: சக்கர தீர்த்த குளம் தண்ணீர் நிறைந்தால் ஓராண்டு வரை வற்றாமல் இருக்கும். இங்கு நீர் நிறைந்திருப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். இதனால் அப்பகுதி மக்களும், ஆதி ஜெகநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.