பதிவு செய்த நாள்
08
டிச
2018
03:12
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா இன்று துவங்குகிறது.திப்புசுல்தான் காலத்துக்கு முந்தையது இக்கோவில். இது முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதை ஆன்மிக பெரியோர்கள் புனரமைத்து, தினமும் பூஜைகள் செய்து வருகின்றனர்.
கோவில் வளாகத்தில் புதிதாக கொடிமரமும், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தற்போது, முதன்முறையாக, இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இன்று (டிசம்., 7ல்) காலை, 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மாலை, 7:00 மணிக்கு அம்ச வாகனத்தில் சரஸ்வதி திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். பஜனை கோஷ்டியுடன் திருவீதி உலா நடக்கிறது.
(டிசம்., 8ல்) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், 3:00 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை, 7:00 மணிக்கு பெருமாள் சேஷவாகனத்தில் தாயார்களுடன் எழுந்தருளுகிறார். திங்கள் கிழமை மாலை, 7:00 மணிக்கு கருடசேவை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து, தீர்த்தவாரியோடு விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.