பதிவு செய்த நாள்
08
டிச
2018
03:12
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, சின்ன ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 12ல் நடக்கிறது. இதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆர்.டி.ஓ., பாஸ்கரன் தலைமையில் நடந்தது. நெரிசலை கட்டுப் படுத்த, 250க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பணியில் இருப்பர். மூன்று ரோடுகளில், எல்.இ.டி., திரை ஏற்பாடு செய்வது, மலையடிவாரம் ஆயிர வைசிய திருமண மண்டபம், ஈரோடு சாலை தெப்பக்குளம் எதிரில், ப.வேலூர் சாலை, சுல்தான் கமிஷன் மண்டி ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்குதல், நகை திருட்டை தடுக்க பெண்களுக்கு சேப்டி பின் வழங்குதல் என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. டி.எஸ்.பி., சண்முகம், தாசில்தார் சுப்ரமணியம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சேகர், அறநிலையத் துறை செயல்அலுவலர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.