உளுந்தூர்பேட்டை பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2018 04:12
உளுந்தூர்பேட்டை: பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (டிசம்., 6ல்)கார்த்திகை மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. அதனையொட்டி அன்று (டிசம்., 6ல்) காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினர். பின்னர் யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்கள் சாற்றப்பட்டன. தொடர்ந்து பழ வகைகள், பால், தயிர், நெய் கொட்டப்பட்டு தீபாராதனை நடந்தது. அகத்தீஸ் வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.