முத்தியால்பேட்டை லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2018 11:12
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லஷ்மி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழாம் ஆண்டு ஸ்ரீந்ருஸிம்ஹ ஸகஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது. அதையொட்டி, காலை முதல் மதியம் வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் 9:00 வரையும் லட்சார்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.