டிராக்டர் சத்தம் குறைந்த சபரிமலை : பக்தர்கள் நிம்மதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2018 12:12
சபரிமலை: கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலையில் டிராக்டர் சத்தம் குறைந்துள்ளது. பக்தர்களுக்கிடையில் பாய்ந்து வரும் டிராக்டர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.சபரிமலைக்கு தேவையான பொருட்கள் பண்டைய காலத்தில் கழுதை சுமடு மூலம் கொண்டு வரப்பட்டது.
மனிதர்களும் தலைசுமடாக கொண்டு வந்து கொண்டிருந்தனர். சுவாமி ஐயப்பன் ரோடு கான்கிரீட் செய்யப்பட்ட பின்னர் டிராக்டர் ஓடுவதற்கு வசதி ஏற்பட்டது. இதனால் டிராக்டர்களில் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. இது செலவு குறைவு என்பதுடன் வேகமாகவும் பொருட்கள் வந்து சேர வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால் பக்தர் கூட்டத்துக்கு இடையில் டிராக்டர் ஓடுவது ஆபத்தானது என்று கூறி நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரமான இரவு 11:00 முதல் 3:00 வரையிலும், மதியம்12:00 முதல் 3:00 மணி வரையிலும் டிராக்டர் ஓடினால் போதும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் ஒரு டிராக்டர் தினமும் 20 டிரிப் அடித்தது என்றால் இப்போது 3 டிரிப் மட்டுமே ஓடுகிறது.இது டிராக்டர் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினாலும் பக்தர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.