சின்னமனுார்: சின்னமனுார் மணி மண்டபத்தில் ஐயப்பன் பக்த பஜனை மடம் சார்பில் நவ. 29ல் லட்சம் முறை ஐயப்பன் திருநாமம் கூறி அர்ச்சனை செய்யும் லட்சார்ச்சனை நிகழ்ச்சி துவங்கியது. தினமும் 12 குருசாமிகள் , 108 திருநாமம் கூறி அர்ச்சனை செய்தனர்.நிறைவாக முல்லை பெரியாற்றில் ஐயப்பன் ஆராட்டு விழா நடந்தது. பக்த பஜனை மடத்தின் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். குருசாமி லோகேந்திர ராஜன் ஆராட்டு நடத்தினார். ஏராளமானோர் பங்கேற்றனர். லட்சுமி நாராயணன் கோயிலில் அன்னதானம் நடந்தது.