Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் ஓட்டிய படகு பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம் பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம்
முதல் பக்கம் » துளிகள்
திருப்புத்தூர் யோக பைரவர்
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் யோக பைரவர்

பதிவு செய்த நாள்

11 டிச
2018
01:12

சிவன் கோயில்களில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். சிவனின் அம்சமான இவர், சிவனால் உருவாக்கப்பட்டவர். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் தொழில்போட்டி, அபரிமித வளர்ச்சியால் ஏற்படும் திருஷ்டி, பொறாமை, கிரகதோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி போல ’சம்பக சஷ்டியும்’ (கார்த்திகை வளர்பிறை சஷ்டி) பைரவருக்கு சிறப்பானது.சம்பக சஷ்டிக்கும் பைரவருக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? புராணகாலத்தில் ஹிரண்யாட்சகன் என்பவன் இருந்தான். அசுரன் என்றாலும் சிவபக்தியும் அவனிடம் இருந்தது. குழந்தை வரம் வேண்டி தவத்தில் ஈடுபட்டான். தவமிருப்போருக்கு தன்னையே தருபவர் அல்லவா சிவன்... தவக்கனல் சிவலோகத்தை எட்டவே,  நேரில் காட்சியளித்தார் சிவன்.  

குறை தீர்க்கும்படி வேண்டியவனுக்கு ஒன்றுக்கு இரண்டாக வரம் அளித்தார். மகிழ்ந்தான் ஹிரண்யாட்சகன். அவனது மனைவிக்கு அந்தகாசுரன், சம்பகாசுரன் (இவனால் வந்தது தான் சம்பக சஷ்டி) என இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர். தந்தை போலவே பிள்ளைகளும் அட்டூழியம் செய்வதை தொழிலாகக் கொண்டனர். தந்தையின் தவமும், சிவனின் அருளும் இணைந்ததால் யாரும் அவர்களை எதிர்க்கத் துணியவில்லை. பூலோகம் மட்டுமின்றி தேவலோகத்திலும் இவர்களின் அராஜகம் ஓங்கியது.  பொறுக்க முடியாத தேவர்கள், சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். தேவர்களைக் காப்பாற்றவும், பூலோகத்தில் தர்மம் தழைக்கவும் தன்னிடம் இருந்தே குழந்தை ஒன்றை உருவாக்கி அதை உற்றுப்பார்க்க குமாரனாக (இளைஞனாக) விஸ்வரூபம் பெற்றது. அந்த திருவடிவமே ’பைரவர்’ கோலம். அதிலிருந்து எட்டு பைரவர்கள் உருவாக, மீண்டும் அதிலிருந்து அறுபத்து நான்கு பைரவர்கள் புறப்பட்டனர். கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியன்று அந்தகாசுரன் மற்றும் சம்பகாசுரனின் வதம் நிகழ்த்தப்பட்டது.  

கொல்லப்பட்ட இருவரும் சிவ பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் உண்டானது. இதிலிருந்து மீள யாத்திரை புறப்பட்டார்.  அதில் கொன்றை வனம் ஒன்றை அடைந்தார். அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டு, யோக நிலையில் தவத்தில் ஆழ்ந்தார்.  அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவன் காட்சியளித்து தோஷம் போக்கினார். ’பைரவா!  இந்தக் கொன்றை வனத்தில் நீயும் எம்முடன் இருந்து உன்னை வணங்குவோரின் குறைகளைப் போக்கியருள்க’ என உத்தரவிட்டார். அவரும் இங்கு யோகபைரவராக தங்கினார். அக்கொன்றை வனமே சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர் என்னும் திருத்தலமாக திகழ்கிறது. நாயன்மார்களால் பாடல் பெற்ற இங்கு கவுரிதாண்டவ மூர்த்தி, ஸ்ரீதளிநாதர், திருத்தளிநாதர், ஸ்ரீதளீஸ்வரர் என்னும் பெயரில் சிவன் அருள்கிறார்.  அம்மன் சிவகாமசுந்தரி. இங்கு சம்பகசஷ்டி விழா ஆறுநாள் நடக்கும். குமரனாக (இளைஞன்) வந்த பைரவர் அசுரவதம் நிகழ்த்தியதால் சம்பகசஷ்டிக்கு குமாரசஷ்டி, சுப்ரமண்யசஷ்டி என்றும் பெயருண்டு.  கார்த்திகை மாத வளர்பிறை பிரதமையன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொள்வர். பைரவர் ஹோமம், அபிஷேகம், ஆராதனை விமரிசையாக நடக்கும். இங்குள்ள யோகபைரவர் சாந்தநிலையில்  வலதுகையில் சிவலிங்கம் வைத்தும், இடதுகையை தொடையில் வைத்தநிலையிலும் காட்சியளிக்கிறார். வாகனமான நாய் அருகில் இல்லை. அத்தர், புனுகு, ஜவ்வாது, சந்தனாதி தைலம், பன்னீர், பால், தயிரால் அபிஷேகம், செவ்வரளி மற்றும் மருக்கொழுந்து மலர்களால் அலங்காரம்,  செவ்வாழைப்பழம், தேன் கலந்த வடை நைவேத்யம் செய்வர்.

நினைத்தது நிறைவேற வெள்ளைப்பூசணி, தேங்காயில் தீபம் ஏற்றுகின்றனர்.  சுத்தமான துணியில் மிளகுகளை முடிச்சிட்டுக் கட்டி, அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றிட வறுமை, கடன், திருஷ்டி அகலும். புதிய முயற்சி, தொழிலில் வெற்றி பெற வேண்டுபவர்கள் சம்பகசஷ்டி காலத்தில் தரிசிக்க கூடுதல் நன்மை கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar